Tuesday, January 17, 2012

நட்பு கவிதை III



கல்லூரி வாழ்க்கை
கடந்து விட்ட பின்னால்
கிடைக்கும் தனிமையில்
கனவாகிவிட்ட இனிமையை
நினைத்து ஏக்கமுறும் மனம்!

வண்ணத்துப்பூச்சிகளாய்
வலம் வந்து விட்டு
கூட்டுப்புழுவாய்
சுருங்கி போன துள்ளல்!

சமுத்திரமாய் ஆர்ப்பரித்து விட்டு
சிறுதுளியாய் குறைந்து போன பலம்!

இவை எல்லாம்
உள்ளுக்குள் ஏதேதோ செய்தாலும்
உள்ளிருக்கும் பட்சி மட்டும்
ஒன்று சொல்கிறது
உலகம் உருண்டை என்று!

1 comment:

  1. வண்ணத்துப்பூச்சிகளாய்
    வலம் வந்து விட்டு
    கூட்டுப்புழுவாய்
    சுருங்கி போன துள்ளல்!
    அழகு அருமை

    ReplyDelete