Monday, October 19, 2020

செயல்கள் பேசும்

 பொருளால் ஆன இவ்வுலகில் செயல்களே


பிரதானம்!

ஆயினும்

சொற்கள்

வேருக்கு விடப்பட்ட

நீராய்!


நம்

சொற்களுக்கும் செயல்களுக்கும் உள்ள இடைவெளியே 

நிர்ணயிக்கிறது அடுத்தவர் மனதில் நமக்கான இடத்தை!


சில சமயங்களில்

நிசப்தத்தால் நிரப்பப்பட்ட செயல்கள்

பழி சொற்களை

பரிசாய் வழங்குகின்றன!


பல சமயங்களில்

கொடுக்கப்பட்ட

வாக்குறுதி களால்

எதிர் பார்த்து

நடைபெறாத செயல்கள்

நீண்ட


மௌனமான புறக்கணிப்பை


பரிசாய் வழங்குகின்றன!


சொற்களை விட


செயல்களே இங்கு பேசும்!