Friday, April 27, 2012

மீசைக்காரன்


“அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே

உச்சி மீது வானிடிந்து

வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே”

என்று

அந்த மீசைக்காரன் பாடி வைத்திருந்தாலும்

இந்த மீசைக்காரன்

உச்சி மீது வீழுகின்ற போது  மட்டும்

அச்சமாக தான் இருகின்றது!

ஆயினும்

பார்த்து அலறுங்கள்-

கரப்பான் பூச்சி பயந்துவிட போகின்றது!


மனசாட்சிக்கு  பயப்படும்

ஒவ்வொருவரும்

கரப்பான் பூச்சிக்கும் பயப்படுங்கள்-

ஏன் தெரியுமா?

மனசாட்சியும்

கரப்பான் பூச்சியும்

இருட்டில் தானே ஒளிந்திருந்து

அவ்வபோது எட்டிப் பார்க்கின்றன!

No comments:

Post a Comment