Sunday, January 13, 2013

பொங்கலாக வாழ்க





உண்ணும் கைகளுக்காக
உழைக்கும் கைகளை
உயர்த்தும் ‘தை’கள்!
மண்ணில் நாமும்
மதிக்க பட வேண்டும் என்று
மனதில் கொள்ள வைக்கும் விதைகள்!

இல்லச் சுவர்களுக்கு மட்டுமல்ல- நம்
உள்ளச் சுவர்களுக்கும்-புது
வெள்ளை அடித்துக்கொள்வோம்!

புத்தரிசியுடன்
புது வெல்லம்-
பொங்கல் இனிக்க!
வார்த்தைகளில் மட்டுமின்றி
இதயத்தாலும்
நல்ல நண்பர்களை சேர்த்துக்கொள்வோம்-
வாழ்க்கை இனிக்க!

நகரத்து குக்கர் பொங்கலில்
குதூகலிக்காமல்
பாரம்பரியத்தை பறைசாற்ற
நகரத்தையும் அன்று  ஒருநாள்
கிராமமாக மாற்றிடுவோம்!

மொத்தத்தில்
இந்த  பொங்கல்
வெற்று பொங்கலாக
அமையாமல்
நம் மனதில்
நற்பண்புகளின்
தங்கலாக அமையட்டும்!