Sunday, July 1, 2012

மரமே! மனமே!


உயிர் தொடும்
சுவாசம் தந்துவிட்டு
எந்த பலனையும்
எதிர்பாராமல்
எதிர் திசையில் ஓடுகின்றன
சாலையோர மரங்கள் !

யார் யாருடைய
இறுதி ஊர்வலங்களுக்கோ
அஞ்சலி செலுத்த
சாலை பரப்பில்
பூக்கள் உதிர்க்கின்றன
நிழற்சாலை மரங்கள்!

மரம் போல்
நிற்கிறாயே ? என்று
இனி
மறந்தும் யாரையும்
சொல்லிவிடாதீர்!
மரம்
மனிதரை காட்டிலும்
மகத்தானது !


2 comments:

  1. அருமை அருமை
    வித்தியாசமான சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. en kadan pani seithu kidapathae...maram...prathipalan ethirparamal.....balachandran

    ReplyDelete