Sunday, June 10, 2012

பிரளயம்


கடல் கொண்ட

லெமுரியா  கண்டத்திற்கு பின்

பிரளயம் ஏதும் கண்டதில்லை என்று

பிரமித்திருந்த தமிழன்

பூமி பிளந்து

ஜீவ சமாதியான போது

சற்றே மங்கலாக கேட்டது -


சாதி மதவெறி ஊழல்

பூத கணங்கள்

கை கோர்த்தபடியே

"நம்மை

அறிவு விளக்கினுள்

அடக்காததால்

அடங்கிப் போனவர்கள்"

என்று கொக்கரிப்பது !

1 comment: