Friday, January 20, 2012

மீண்டும் குழந்தையாவோமா?



கருவறையின் வெதுவெதுப்பு அனுபவித்து

அன்னையின் அரவணைப்பு தாண்டி

கிலுகிலுப்பை ஒலியினை இசைத்து

நடைவண்டி பாதைக்கு இசைந்து

நிலவினை அப்பமாக்கி உண்டு

விண்மீன்களுக்கு தூண்டில் போட்டு

தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும்

எண்ணத்தை கொள்ளை கொள்ள

விரட்டிப் பிடித்துவீதியிலே திரிந்து

விழியிலே நிறைந்து வீணை தந்திஎன

விரும்பி  மீட்டப்பட்டு

விஷமங்கள் யாவையும் 

விளையாட்டாகவே விரும்பப்பட்டு 

விண்வெளியில் பறந்த - அந்த 

சிறு பருவம்  குறு பருவமாக  

குறைந்து போய் விட

என்னில்

இன்னும்   மீதமிருக்கும்

அந்த பருவத்து செய்கைகள்

எவராலும் விரும்பப்படாமல்
ஏளனமாய் போய்விட்டதில்
மீண்டும் பிறந்து
அந்த குழந்தை பருவத்தில் குதூகலிக்க
குறைந்தது எத்தனை காலமாகுமோ
என்று
நீங்காத ஏக்கங்கள் நெஞ்செங்கும்!



2 comments:

  1. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நீங்காத ஏக்கங்கள் நெஞ்செங்கும்!
    எல்லோருக்குமான ஏக்கம் அருமையான பகிர்வு

    ReplyDelete