Saturday, December 31, 2011

'தானே' புயல்


கரையின் கறைகளை
கழுவிக் களைகிறது
அலை

கைமாறாய்
தொட்டிலாய் மாறி
கடலை தாலாட்டுகிறது
கரை

என்றெல்லாம்

கடலை ரசிக்க

கடலோர  கவிதை படிக்க
முடியாமல் செய்து விட்டது -

கடலூரில்
புதுவையில்
'தானே' புயல் !

1 comment:

  1. அதனால் தான் மீனவர்கள், கப்பல் மாலுமிகளும் கடலுக்கு பயப் படுகிறார்கள்...
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete