Monday, December 19, 2011

இயற்கை


மழைத்துளியும்

கண்ணீர் நிகர்ப்ப

இருப்பதால்

மேனிமீது படும்போதெல்லாம்

உருகுகிறது-

மனம்!



நிழலின் அருமையை

நிதம் உணர்த்தும்

சுட்டெரிக்கும் சூரியன்!

முகம் அறையும்  
பனிக்காற்றின் மீதுள்ள

கோபம்

காதுநுனி சில்லிப்பில்

காணாமல் போகும்  மாயமென்ன ?
  



இயற்கையோடு

இயைந்தது தானே

இனிய வாழ்க்கை!



ஆயினும்

கடையாணியான

சுற்றுசூழல் கழன்று விட்ட பின்னும்

காலச்சக்கரம்

சுற்றிக்கொண்டு இருக்கிறது

இன்னும் வேகமாக!

1 comment:

  1. சுற்றிக்கொண்டு இருக்கிறது

    இன்னும் வேகமாக!
    அருமை .

    ReplyDelete