Wednesday, April 27, 2011

இந்தியப் பெருமை



இது
மகாத்மா  தேசமாம்-
இருப்பினும்
கரண்சி வாசமே
இங்கு சுவாசமாய்!

இது
போதி மரங்களின் தோப்பாம்-
இருப்பினும்
போதையின் பிடியில்
பித்தர்கள்!

இது
மனுநீதி்ச் சோழனின் மண்ணாம்-
இருப்பினும்
முன்ஜாமீன்களும்
முடிவடையாத கமிஷன்களும்
ஆள்வோர்க்கு
வளையும் சட்டங்களும்!

இது
ஏகலைவர்கள் நாடாம்-
இருப்பினும்
எண்ணிலடங்கா
கல்லூரிகளும்
கழுத்தை நெறிக்கும்
கட்டணங்களும்!

இது
ஷாஜகான் மும்தாஜ்களின் நந்தவனமாம்-
இருப்பினும்
கண்மூடித்தனமான
காதல் ஈர்ப்புகளும்
காலம் கடந்த
அங்கலாய்ப்புகளும்!

எனினும்
இந்தியன் என்று சொல்வதில்
பெருமையாக தான் இருக்கிறது-
உதாரண புருஷர்கள் மட்டும்
ஒரு கோடி பேர் இருப்பதால்!

Thursday, April 21, 2011

அ.... ஆ.... போ....


இந்த பூமியில்
காற்று வீசுகிறது
மழை பொழிகிறது
அலைகள் அடிக்கின்றன
மலைகள் கூட அசையாதிருக்கின்றன 
 இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா?  
நான் தான் இவ்வுலகின் 
மகத்தான படைப்பு என
ஆட்டம் போட்ட
மனிதர்கள் இல்லை
மற்ற உயிரினங்கள் இல்லை
இவற்றுக்கு உயிர் முட்ட
சுவாசம்  தந்த மரங்கள் இல்லை
காரணம்
உலகில்
அ.. ஆ... போ...
அணு ஆயதப் போட்டி!